Sunday, May 8, 2011

உயிர் + மெய் = உயிர்மெய்....



  அம்மா 
உயிரும் மெய்யும் கலந்த 
        உயிர்மெய்...

நானே விளக்குகிறேன்...
உயிரெழுத்து 
ம் மெய்யெழுத்து 
மா உயிர்மெய் எழுத்து

ஆம்... அம்மா 
உயிரும் மெய்யும் கலந்த 
உயிர்மெய்...

நாத்திகர் வீட்டில் கூட 
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து வீடுகளில் 
சிதறிவிழுந்த 
தேவதைகளின் சிதறல்கள்...

ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும் 
உயிர்கோளத்தின் அதிசய 
அன்னப்பறவை...

திட்டி தீர்க்கும் கரங்களுக்கு மத்தியில் 
தட்டி கொடுக்கும் 
வலையல்கரம்...

நனைந்தபடி வீடு நுழைந்தேன் 
 " அறிவிருக்கா.. ஏன் இப்படி நனையற .."
அதட்டினான் அண்ணன்...

" குடை எடுத்துகிட்டு போகவேண்டியதுதானே .."
அக்கரையில் அக்கா..

" காய்ச்சல் வந்தா நான் தானே செலவு பண்ணனும்.."
ஆதங்கத்தில் அப்பா.. 

" தலையை துவட்டிக்கப்பா .."
துண்டுடன் அம்மா..

அள்ளி அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்... 

அம்மா...
குடும்பம் தழைக்க 
அரவணைத்துப்போகும் 
மனித ஆலமரம்...


அம்மாவைப் போற்றுவோம்...
அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்...
(இது ஒரு மீள் பதிவு )



1 comment: