Tuesday, April 5, 2011

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?

      சுற்றுச்சூழல்.... இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டு இருக்கிறது. 

                           சுற்றுச்சூழல் பாதுகாக்க சில குறிப்புகள்......

 * வீடு, அலுவலகங்களில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.


*  வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின் பின்புறம் சிறு தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்.


*  டிராஃபிக்கில் இருக்கும்போது வண்டியை 'ஆஃப்' செய்துவிடுங்கள்...


*  வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று  தனியாக பிரித்து வைக்கலாம். 


*  கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு.



*  கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்! 



*  ஒருமுறை உபயோகப்படுத்திய பொருட்களை மீண்டும் இன்னொரு முறைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அதை நடைமுறைப் படுத்தலாம்.



*  கணினியில் பிரிண்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு பக்கத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையலாம்! 


*  பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். 


   இவை எல்லாம் அடிப்படை விசியங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பது தெளிவாகும்! 

       சுற்றுச்சூழல் தொடர்பாக அறிவு பெற கீழ்க்கண்ட பத்திரிகைகளைப் படிக்கலாம்......

* பூவுலகு * காட்டுயிர் * Down to Earth  * Consumer Voice  * BIJA - the seed  * National Geography  * Geo  * Survey of the Environment - The Hindu.

      2011 - ம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்து இருக்கிறது ஐ.நா. இதுவரையில் நீங்கள் புது வருடத்தில் எந்த ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை. இந்த வருடத்தில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

         காக்கையும் குருவியும் நம் சாதிதானே தோழா? 



















No comments:

Post a Comment